search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளைஞர்களுக்கு உடற்தகுதி தேர்விற்கு இலவச பயிற்சி
    X

    இளைஞர்களுக்கு உடற்தகுதி தேர்விற்கு இலவச பயிற்சி

    • 2-ம் நிலைக் காவலர், 2-ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
    • வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட்ட இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயின்ற 41 தேர்வர்களில் 15 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 2-ம் நிலைக் காவலர், 2-ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட்ட இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயின்ற 41 தேர்வர்களில் 15 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

    மேலும், எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்விற்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக இலவச உடற்தகுதி தேர்விற்கான பயிற்சி, சேலம், காந்தி விளையாட்டு மைதானத்தில் வருகிற 4-ந்தேதி காலை 7மணிக்கு தொடங்குகிறது. இப்பயிற்சி சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.

    இப்பயிற்சி வகுப்பில் முன்பதிவு செய்து கலந்து கொண்டு பயன் பெறுமாறு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×