search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை விபத்தில் காயமடைந்தவருக்கு  22 ஆண்டுகளாக காப்பீடு தொகையை வழங்காததால் நிறுவனத்தில் ஜப்தி நடவடிக்கை  -ஓசூர் சார்பு நீதிமன்றம் உத்தரவால் பரபரப்பு
    X

    கோர்ட் ஊழியர்கள் மற்றும் வக்கீல் உதவியாளர்கள், ஜப்தி நடவடிக்கைக்காக வந்த போது எடுத்த படம்.

    சாலை விபத்தில் காயமடைந்தவருக்கு 22 ஆண்டுகளாக காப்பீடு தொகையை வழங்காததால் நிறுவனத்தில் ஜப்தி நடவடிக்கை -ஓசூர் சார்பு நீதிமன்றம் உத்தரவால் பரபரப்பு

    • காப்பீடு தொகை 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வழங்கவில்லை.
    • காப்பீடு நிறுவனத்தில் ஜப்தி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    ஓசூர்,

    ஓசூரை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 62). இவர் கடந்த 2001 -ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதி விபத்தில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த அவருக்கு ஓசூரில் இயங்கி வரும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீடு தொகை 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வழங்கவில்லை என தெரிகிறது.

    இதனை எதிர்த்து அவர் ஓசூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு கடந்த 2001 முதல் 2018- ம் ஆண்டு வரை நடைபெற்றது. ஆனாலும் அவருக்கு காப்பீடு தொகை வழங்கப்படவில்லை. அதனை தொடர்ந்து கிருஷ்ணப்பா கடந்த 2018 -ம் ஆண்டு காப்பீடு தொகையை வழங்காததால் காப்பீடு நிறுவனத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள ஓசூர் சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தற்போது இந்த வழக்கில் காப்பீட்டு தொகையை வழங்காத காப்பீட்டு நிறுவனத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம்உத்தரவிட்டது.

    நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கோர்ட் ஊழியர்கள், கிருஷ்ணப்பாவின் வக்கீல்கள் மற்றும், அவர்களின் உதவியாளர்கள் அடங்கிய குழு, ஓசூர்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் அந்த காப்பீடு நிறுவனத்தில் ஜப்தி நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த கணினிகள், மேசைகள், நாற்காலிகள், பீரோக்கள் மற்றும் காற்றாடிகள் ஆகியவற்றை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

    அப்போது, சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்தினர் 2 நாட்களில் பாதிக்கப்பட்டவருக்கு காப்பீடு பணத்தை தருவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இரு தரப்பினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

    Next Story
    ×