search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்பந்து போட்டி-கேரளா அணி வெற்றி
    X

    கால்பந்து போட்டி-கேரளா அணி வெற்றி

    • நேற்று காலை அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற்றது.
    • நீலகிரி அணிக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன.

    அரவேணு,

    கோத்தகிரி காந்தி மைதானத்தில் ராவ்பகதூர் ஆர்யா கவுண்டர் நினைவுக் கோப்பைகான மூத்தோர் கால்பந்து போட்டிகள் தொடங்கியது.இதில் கேரளா, கண்ணனூர், சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், வியாசர்பாடி, மற்றும் நீலகிரி ஆகிய 8 அணிகள் பங்கு பெற்று விளையாடியது. நேற்று முன்தினம் கால் இறுதி போட்டிகள் நடைபெற்ற நிலையில் நேற்று காலை அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற்றது. முதல் அரை இறுதிப்போட்டியில் கேரளா மற்றும் திண்டுக்கல் அணிகள் விளையாடிது. இதில் கேரளா அணி 3 கோல் போட்டு வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தொடர்ந்து நடந்த 2-வது அரை இறுதிப் போட்டியில் நீலகிரி மற்றும் திருப்பூர் அணிகள் விளையாடியது. இதில் நீலகிரி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    இதை அடுத்து கேரளா மற்றும் நீலகிரி அணிகள் இடையே மாலை 4 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய கேரளா அணி ஒரு கோல் மட்டும் போட்டு வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற கேரளா அணி மற்றும் 2ம் இடம் பிடித்த நீலகிரி அணிக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×