search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செய்யாறு அருகே பஸ் டிரைவர் கொலையில் பெண் உள்பட 5 பேர் கைது
    X

    செய்யாறு அருகே பஸ் டிரைவர் கொலையில் பெண் உள்பட 5 பேர் கைது

    • கடந்த 6 மாதத்திற்கு முன்பு முருகன் அந்த பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
    • சிறுமியின் பெற்றோர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். முருகன் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார்.

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த பாண்டியன் பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 33). பஸ் டிரைவர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு முருகன் அந்த பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். முருகன் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார்.

    பின்னர் கடந்த 23-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். நேற்று காலை 7 மணி அளவில் அவரது வீட்டின் பின்புறம் உள்ள தைலம் தோப்பில் நின்று கொண்டிருந்தார்.

    அங்கு மறைந்திருந்த சிறுமியின் உறவினர்கள் முருகனை கத்தியால் சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகனை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செய்யார் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கொலை செய்து தலைமறைவாக இருந்த சிறுமியின் உறவினர்கள் தணிகை மலை (வயது 45), வேல்முருகன் (26), தேவிகா (40), சுரேஷ் (21), விக்னேஷ் (19) ஆகிய 5 பேரை நேற்றிரவு கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததால் மனவேதனை அடைந்து கடந்த 6 மாதங்களாக ஆத்திரத்தில் இருந்ததாகவும், ஜாமினில் வெளியே வந்த முருகனை நோட்டமிட்டு வெட்டி கொலை செய்ததாகவும் போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×