search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதிய விலை கிடைக்காததால் சாமந்தி பூக்களை மார்க்கெட்டிலேயே விட்டு சென்ற விவசாயிகள்
    X

     பூக்களை நகராட்சி நிர்வாகம் பொக்லைன் மூலமாக லாரிகளில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.

    போதிய விலை கிடைக்காததால் சாமந்தி பூக்களை மார்க்கெட்டிலேயே விட்டு சென்ற விவசாயிகள்

    • சாமந்திப்பூகளின் விலையில் வரலாறு காணாத வகையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
    • நகராட்சி நிர்வாகம் பொக்லைன் மூலமாக லாரிகளில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் அதிகப்படியாக பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு சாகுபடி செய்யும் பூக்கள் தினந்தோறும் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இயங்கும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த பூ மார்க்கெட்டில் இருந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தருமபுரி மாவட்டத்தில் கார்த்திகை மாதத்தில் அய்யப்ப பக்தர்கள் வாங்கியதாலும் , முகூர்த்த தினங்கள் வந்ததாலும் பூக்களின் விலை உயர்ந்து நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் புயல் எதிரொலியால் தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக இடைவிடாது சாரல் மழை பெய்து வந்தது. இதனால் திடீரென பூக்கள் கடுமையாக விலை சரிந்தது. குறிப்பாக சாமந்திப்பூக்களின் விளைச்சல் அதிகரிப்பால் மார்க்கெட்டிற்கு சாமந்திப் பூக்கள் குவிய தொடங்கியதை அடுத்து சாமந்திப்பூகளின் விலையில் வரலாறு காணாத வகையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

    நேற்று தருமபுரி நகரபேருந்து நிலையத்தில் இயங்கும் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ சாமந்தி பூ 5 ரூபாய் முதல் 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சாமந்தி பூக்களை வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் ஒரு டன் பூக்களுக்கு மேல் விவசாயிகள் பஸ் நிலையத்திலேயே விட்டு சென்றனர். அந்த பூக்களை நகராட்சி நிர்வாகம் பொக்லைன் மூலமாக லாரிகளில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.

    Next Story
    ×