search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் பரபரப்பு: சாலையில் அறுந்து விழுந்த   உயர் அழுத்த மின் கம்பி பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
    X

    விளம்பர பலகை விழுந்ததால் மின்கம்பி அறுந்து தொங்கிய காட்சி. 

    கடலூரில் பரபரப்பு: சாலையில் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின் கம்பி பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

    • கடலூரில் பரபரப்பு சாலையில் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின் கம்பி பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள்.
    • மின்கம்பி அறுந்து விழுந்த இடத்தில் குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது.

    கடலூர்:

    கடலூர் நகரத்தின் மையப் பகுதியாக மஞ்சகுப்பம் நேதாஜி சாலை உள்ளது. இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்களும் நடை பாதைசாரிகளும் சென்று வருகின்றனர்.இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் ஒரு தனியார் கடை உள்ளது. இக்கடையின் கட்டிடம் மீது உயரத்தில் விளம்பரப் பலகை இருந்ததால் மாநகராட்சி ஊழியர்கள் விபத்து ஏற்படும் அபாயம் கருதி உடனடியாக அகற்ற வேண்டும் என கடை உரிமையாளருக்கு அறிவுறுத்தினர்.

    அதன் பேரில் இன்று காலை கட்டிடத்தின் மேலே இருந்த விளம்பர பலகையை கடை ஊழியர்கள் அகற்ற முயற்சி செய்தனர். அப்போது எதிர்பாராமல் விளம்பரப்பலகை உயர் அழுத்த மின் கம்பி மீது விழுந்தது. இதன் காரணமாக மின் கம்பி அறுந்து சாலையில் விழுந்தது. அப்போது பொதுமக்கள் இதனை பார்த்து அலறி அடித்து ஓடினார்கள். மேலும் மின்கம்பி அறுந்து விழுந்த இடத்தில் குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது.

    ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தை மீது விழாமல் அருகாமையில் விழுந்ததால் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இதனைத் தொடர்ந்து உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

    பின்னர் மின்சாரத்துறை உதவி பொறியாளர் (பொறுப்பு) கணேசன் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×