என் மலர்
உள்ளூர் செய்திகள்

பருவத்திற்கு ஏற்ப விவசாயிகளுக்கு விதை வழங்க வேண்டும்
- தரமான சான்று விதை உற்பத்தி குறித்த புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டது.
- சான்று விதை உற்பத்தி குறித்து விளக்கம் அளித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட அரசு வி தை உற்பத்தியாளர்களுக்கு ஈரோடு மாவட்ட விதைச்சா ன்று மற்றும் அங்ககச்சான்று துறை சார்பில் தரமான சான்று விதை உற்பத்தி குறித்த புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டது.
ஈரோடு வேளாண் இணை இயக்குனர் அலுவ லகத்தில் நடந்த பயிற்சிக்கு இணை இயக்குனர் வெங்கடேசன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உயர் விளைச்சல் தரக்கூடிய புதிய பயிர் ரகங்களில் தரமான விதை உற்பத்திக்கு தேவையான அனைத்து தொழில் நுட்பங்களையும் தவறாமல் கடைபிடித்து, தரமான சான்று விதைகளை உற்பத்தி செய்ய வேண்டும்.
பருவத்து க்கு ஏற்ப விவசாயிகளுக்கு விதை வினியோகம் செய்ய வேண்டும் என்றார்.
வேளாண் துணை இயக்குனர் (மாநில திட்டம்) தமிழ்செல்வி பேசும்போது, ''நடப்பாண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சிறு தானியங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அனைத்து அரசு விதை உற்பத்தியாளர்களும், விவசாயிகளின் தேவை அறிந்து விதைகளை வழங்க வேண்டும்,''
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்ட விதை சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம், தொழில் நுட்பங்கள் குறித்து பேசினார்.
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் 42 பஞ்சாயத்துகளில் விவசாயி களை அதிக அளவில் தேர்வு செய்து உரிய தொழில் நுட்ப பயிற்சி வழங்கி விதை பண்ணைகளை அதிகமாக அமைக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
விதை சான்று அலுவலர் ராதா, மாவட்ட விதை சான்று அலுவலர்கள் மாரிமுத்து, தமிழரசு, நாசர் அலி, ேஹமாவதி ஆகியோர் பயிற்சி வழங்கினர்.
பாசி பயிறு, உளுந்து, தட்டை பயிறு, கொள்ளு, துவரை, சிறு தானிய பயிர்களான ராகி, சோளம் போன்றவற்றின் சான்று விதை உற்பத்தி குறித்து விளக்கம் அளித்தனர்.






