என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்ப பிரச்சினையால் உயிரை மாய்த்த கட்டிட மேஸ்திரி
    X

    குடும்ப பிரச்சினையால் உயிரை மாய்த்த கட்டிட மேஸ்திரி

    • விவசாய நிலத்தில் ஒரு மரத்தடியில் அரளிக்கொட்டையை அரைத்து தின்றுவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்

    பாப்பாரப்பட்டி

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள கண்ணுகாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 52). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. நேற்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்தது.

    இதில் மனமுடைந்த கோவிந்தசாமி கண்ணு காரம்பட்டியில் உள்ள தனது விவசாய நிலத்தில் ஒரு மரத்தடியில் அரளிக்கொட்டையை அரைத்து தின்றுவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அவரை அங்கிருந்து மீட்டு உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் கோவிந்தசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×