search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் பட்டப்பகலில் நடந்த டிரைவர் கொலையில் 5 பேருக்கு வலைவீச்சு- போலீசார் விசாரணை
    X

    மதுரையில் பட்டப்பகலில் நடந்த டிரைவர் கொலையில் 5 பேருக்கு வலைவீச்சு- போலீசார் விசாரணை

    • சரவணக்குமார் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
    • சரவணக்குமார் தனக்கு பிறந்த குழந்தையை தன்னிடம் தந்துவிடுமாறு மனைவியிடம் கேட்டு வந்துள்ளார்.

    மதுரை:

    மதுரை செல்லூர் அருள்தாஸ்புரத்தை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் சரவணக்குமார் (வயது 29). கோவையில் உள்ள கண்ணாடி கடையில் டிரைவராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரைக்கு வந்திருந்தார்.

    நேற்று மதியம் தத்தனேரி பகுதியில் இருந்து வைகை வடகரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சரவணக்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால், காரில் வந்த ஒரு கும்பல் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து கிடந்த சரவணக்குமாரை, காரில் வந்த 5 பேர் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த செல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அவர்கள் சரவணக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொன்றார்கள்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    சரவணக்குமார் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவரும் தங்களது குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் சரவணக்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி அவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    சரவணக்குமாரை பிரிந்து சென்ற அவரது மனைவி பரத் என்பவருடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சரவணக்குமார் தனக்கு பிறந்த குழந்தையை தன்னிடம் தந்துவிடுமாறு மனைவியிடம் கேட்டு வந்துள்ளார். இது மனைவி குடும்பத்தினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்ற சரவணக்குமாரை காரில் வந்த கும்பல் வெட்டி கொலை செய்துள்ளது. குழந்தையை கேட்ட விவகாரத்தில் அவரது மனைவி குடும்பத்தினர் சரவணக்குமாரை கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக அவரது மனைவி சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படும் பரத் மற்றும் வல்லரசு உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சரவணக்குமார் கொலையில் அவரது மனைவிக்கு தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×