search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் பெரியார் படத்துக்கு தி.மு.க.வினர் மாலை
    X

    ஓசூரில் பெரியார் படத்துக்கு தி.மு.க.வினர் மாலை

    • பெரியாரின் 49-வது நினைவு நாள், ஓசூரில் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
    • பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பெரியாரின் 49-வது நினைவு நாள், ஓசூரில் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

    ஓசூர் - தளி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் தலைமை தாங்கி பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    மேலும் இதில், மாநகர செயலாளருமான எஸ்.ஏ.சத்யா, மாநில இளைஞரணி துணை செயலாளர் பி.எஸ்.சீனிவாசன், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×