search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலகரத்தில் இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
    X

    கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.




    மேலகரத்தில் இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    • பனை தொழிலாளர்கள் தங்களது உரிமத்தை புதுப்பிப்பதற்கு தூத்துக்குடிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
    • மாநில துணை தலைவரும் தென் மாவட்ட பொறுப்பாளருமான அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் நடைபெற்றது.

    தென்காசி:

    குற்றாலம் மேலகரத்தில் உள்ள இந்திய நாடார்கள் பேரமைப்பின் மண்டல அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் மாநில துணை தலைவரும் தென் மாவட்ட பொறுப்பாளருமான அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மத்திய மாவட்ட தலைவர் ஆனந்த் காசிராஜன் பேசும்போது, பனை தொழிலாளர்கள் தங்களது உரிமத்தை புதுப்பிப்பதற்கு தூத்துக்குடிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது இதனை தென்காசி மாவட்டத்தில் உள்ள பனை தொழிலாளர்கள் தென்காசி மாவட்டத்தில் புதுப்பித்து கொள்வதற்கு ஆவண செய்ய வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட துணை தலைவர் கணேசன், மத்திய மாவட்ட செயலாளர் ஜான் டேவிட், தென்காசி நகர தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய தலைவர் பழனியப்பன், மேல நீலிதநல்லூர் ஒன்றிய தலைவர் மாரியப்பன், தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பாலகிருஷ்ணன், வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் குமரேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×