என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூலிப்பட்டி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுடன் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் கலந்துரையாடிய காட்சி.
நாமக்கல் அருகே அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு
- அங்கன்வாடிகளில் பயிலும் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதா, மாதம் எடை மற்றும் உயரம் அளவிடுதல், ஊட்டச்சத்து நிலை ஆகியவை குறித்து அங்கன்வாடி பணியா–ளர்கள் கணக்கெடுப்பு செய்து வருகின்றனர்.
- கூலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கினார்.
நாமக்கல்:
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைக–ளுக்கு முன்பருவ கல்வியை வழங்குவதுடன், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சத்தான உணவு வகைகள் குறித்த ஆலோசனைகளையும் வழங்கி, குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
அங்கன்வாடிகளில் பயிலும் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதா, மாதம் எடை மற்றும் உயரம் அளவிடுதல், ஊட்டச்சத்து நிலை ஆகியவை குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் கணக்கெடுப்பு செய்து வருகின்றனர்.
இதையொட்டி நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், கூலிப்பட்டி அங்கன்வாடி மையத்திற்கு கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் சென்று குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கூடிய கல்வி கற்கும் வகையிலான விளையாட்டு பொருட்கள் தேவையான அளவு இருப்பதையும், குழந்தைகள் அந்த விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி விளையாடுவதையும் பார்வையிட்டார்.
அங்கன்வாடி மைய வளாகத்தில் உள்ள ஊட்டச்சத்து தோட்டத்தில் வல்லாரை கீரை உள்ளிட்ட பல்வேறு கீரை மற்றும் காய்கறி செடிகள் பராமரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு, செடிகள் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து, கூலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கினார்.






