என் மலர்
உள்ளூர் செய்திகள்

எண்ணூரில் பள்ளி அறையில் மேல்தள சிமெண்டு மின்விசிறியுடன் பெயர்ந்து விழுந்தது
- கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் இன்று அதிகாலை மேல்தள சிமெண்டு மின் விசிறியுடன் பெயர்ந்து விழுந்தது.
- மேல்தள சிமெண்டு பெயர்ந்து விழுந்ததில் கம்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தன.
திருவொற்றியூர்:
எண்ணூர் நெட்டுக்குப்பம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 137 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் இன்று அதிகாலை மேல்தள சிமெண்டு மின் விசிறியுடன் பெயர்ந்து விழுந்தது. இதில் கம்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தன. அறையில் யாரும் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சேதம் அடைந்த அறையை திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, உதவி ஆணையர் சங்கரன், வார்டு கவுன்சிலர் சிவக்குமார் பார்வையிட்டனர்.
Next Story






