search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் புத்தக கழக  செயல்பாடு தொடக்க விழா
    X

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் புத்தக கழக செயல்பாடு தொடக்க விழா

    • பள்ளி முதல்வர் பாலசுந்தர் புத்தக கழகச் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார்.
    • வினாடி-வினா கழக செயல்பாட்டினை தேவி ஸ்ரீ குழுவினர் காட்சிப்படுத்தினர்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் புத்தககழக செயல்பாடு தொடக்க விழா நடைபெற்றது. பாரத் கல்விக் குழுமத்தின் செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆசிரியை சுமதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் கலந்து கொண்டார். சுபாஷினி வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் பாலசுந்தர் புத்தக கழகச் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார். மாணவி காளிபிரியா குழுவினர் ஆங்கில கழக செயல்பாடு குறித்தும், ஸ்ரீவானி குழுவினர் கலைக்கழக செயல்பாடு குறித்தும், அனுபாமா அறிவியல்கழக செயல்பாடு, காயத்ரி கணிதகழகச் செயல்பாடு குறித்தும், வினாடி வினா கழக செயல்பாட்டினை தேவி ஸ்ரீ குழுவினரும் காட்சிப்படுத்தினர். நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகளுக்கு ஆர்வமூட்டல் காணொளி திரையிடப்பட்டது. பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஒவ்வொரு கழக செயல்பாட்டின் முக்கியத்துவம் நன்மைகள் குறித்து பேசினார்.

    நிகழ்ச்சியை மிருதுளா ஜெனனி தொகுத்து வழங்கினார். முடிவில் ஆஹிலா நன்றி கூறினார். பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

    Next Story
    ×