search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களுக்கு சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு
    X

    மாணவ-மாணவிகளுக்கு சிறுதானிய உணவுகள் வழங்கப்பட்டன.

    மாணவர்களுக்கு சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு

    • திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் சங்க தலைவர் தேர்வு சின்ன துரை மாணவ -மாணவிகளுக்கு நிலக்கடலை, சுண்டலை வழங்கி துவக்கி வைத்து பேசினார்.
    • தினமும் உடலுக்கு தேவைப்படும் புரதத்தின் அளவு இறைச்சி உணவுகளை விட சிறு தானியங்களில் அதிகம் உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இடைவேளையின் போது சிறுதானிய உணவுகள் மற்றும் பயறு வகைகள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பாலமுருகன் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் பாஸ்கரன், சக்கரபாணி, தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் சங்க தலைவர் தேர்வு சின்ன துரை மாணவ -மாணவிகளுக்கு நிலக்கடலை, சுண்டலை வழங்கி துவக்கி வைத்து பேசினார்.

    தினமும் உடலுக்கு தேவைப்படும் புரதத்தின் அளவு இறைச்சி உணவுகளை விட சிறு தானியங்களில் அதிகம் உள்ளது. சிறுதானியங்கள் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக அமைகின்றன என்றார்.

    முடிவில் கலை ஆசிரியர் அன்புமணி நன்றி கூறினார்.

    Next Story
    ×