search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காடையாம்பட்டி யூனியன் கூட்டத்தில்கவுன்சிலர்கள் திடீர் தர்ணா போராட்டம்
    X

    கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி. 

    காடையாம்பட்டி யூனியன் கூட்டத்தில்கவுன்சிலர்கள் திடீர் தர்ணா போராட்டம்

    • சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், கூட்டரங்கில் நடைபெற்றது.
    • பொது நிதியில் திட்டப் பணிகளை தொடங்கி 9 மாத காலம் ஆகிவிட்டது. பொது நிதியில் பணிகளை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார். ஆணையாளர் வெங்கடேஷ், வட்டார வளர்ச்சி அலு வலர், கிளை ஊராட்சி அலுவலர் உமா சங்கர், ஒன்றிய துணைத் தலைவர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கவுன்சி லர்கள் ரமேஷ், வெங்க டேஷ், சாமுராய் குரு, அசோகன் உள்ளிட்டோர், பொது நிதியில் திட்டப் பணிகளை தொடங்கி 9 மாத காலம் ஆகிவிட்டது. பொது நிதியில் பணிகளை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றனர். இதற்கு, பொது நிதியில் பணிகளை மேற்கொள்ள முடியாது. போதுமான நிதியில்லை என்று ஒன்றிய தலைவர் பதில் அளித்தார். இதை யடுத்து, பொது நிதியிலிருந்து பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றால் அனைத்து கவுன்சி லர்களும் ராஜினாமா செய்கிறோம் என்று கூறி, ஒன்றிய அலுவலக நுழைவா யிலில் அமர்ந்து கோஷமிட்ட படி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலு வலகத்தில் சிறிது நேரம் பர பரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் அதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    Next Story
    ×