என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காடையாம்பட்டி யூனியன் கூட்டத்தில்கவுன்சிலர்கள் திடீர் தர்ணா போராட்டம்
- சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், கூட்டரங்கில் நடைபெற்றது.
- பொது நிதியில் திட்டப் பணிகளை தொடங்கி 9 மாத காலம் ஆகிவிட்டது. பொது நிதியில் பணிகளை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றனர்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார். ஆணையாளர் வெங்கடேஷ், வட்டார வளர்ச்சி அலு வலர், கிளை ஊராட்சி அலுவலர் உமா சங்கர், ஒன்றிய துணைத் தலைவர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சி லர்கள் ரமேஷ், வெங்க டேஷ், சாமுராய் குரு, அசோகன் உள்ளிட்டோர், பொது நிதியில் திட்டப் பணிகளை தொடங்கி 9 மாத காலம் ஆகிவிட்டது. பொது நிதியில் பணிகளை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றனர். இதற்கு, பொது நிதியில் பணிகளை மேற்கொள்ள முடியாது. போதுமான நிதியில்லை என்று ஒன்றிய தலைவர் பதில் அளித்தார். இதை யடுத்து, பொது நிதியிலிருந்து பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றால் அனைத்து கவுன்சி லர்களும் ராஜினாமா செய்கிறோம் என்று கூறி, ஒன்றிய அலுவலக நுழைவா யிலில் அமர்ந்து கோஷமிட்ட படி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலு வலகத்தில் சிறிது நேரம் பர பரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் அதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்