search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே  அரசுப்பள்ளியில்  கலைத்திருவிழா
    X

    மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்தபடம்.

    விளாத்திகுளம் அருகே அரசுப்பள்ளியில் கலைத்திருவிழா

    • சிங்கிலிபட்டி நடுநிலைப்பள்ளியில் பள்ளி அளவிலான கலைத்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் யூனியன் சிங்கிலிபட்டி நடுநிலைப்பள்ளியில் பள்ளி அளவிலான கலைத்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. சிங்கிலிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியை விஜயராணி முன்னிலை வகித்தார். தேவராட்டம், கரகாட்டம், கும்மி, இயற்கை விழிப்புணர்வு நாடகம், களிமண் உருவ பொம்மை செய்தல், பாட்டுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, நாட்டுப்புறப் பாடல் என பல்வேறு பிரிவுகளில் மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி அளவில் நடந்த இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் வெற்றி பெற்ற மாணவர்கள் புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அடுத்த வாரம் நடைபெற உள்ள வட்டார அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமையாசிரியர் கனகராஜ், ஆசிரியர்கள் பிரியா, புனிதா, லீலா, சீதாலட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×