search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார்சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி தப்பி ஓட்டம்- 3 மணி நேரத்தில் பிடித்த போலீசார்
    X

    மோட்டார்சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி தப்பி ஓட்டம்- 3 மணி நேரத்தில் பிடித்த போலீசார்

    • நாகர்கோவில் நகர் முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடினார்கள்.
    • கைது செய்யப்பட்ட வல்லரசுவை நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    நாகர்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் மருதன் கிணறு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வல்லரசு (வயது 21). இவர் தற்பொழுது சங்கரன்கோவில் நல்லரசன் கோட்டை பகுதியில் வசித்து வருகிறார்.

    இவர் குமரி மாவட்டம் ஈத்தாமொழி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வல்லரசுவை ஈத்தாமொழி போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிபதி ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து போலீசார் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்க வல்லரசுவை அழைத்து வந்தனர். ஜெயில் வாசலில் இருந்து வல்லரசு போலீஸ் பிடியில் இருந்து நேற்று இரவு 9.45 மணிக்கு தப்பி ஓடிவிட்டார். வல்லரசு தப்பி ஓடியது குறித்து நாகர்கோவில் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறை மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நாகர்கோவில் நகர் முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடினார்கள். இந்த நிலையில் வடசேரி பஸ் இளைய பகுதியில் வெளியூர் தப்பி செல்வதற்காக நின்று கொண்டிருந்த வல்லரசுவை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட வல்லரசுவை நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீஸ் பிடியிலிருந்து தப்ப முயன்றது தொடர்பாக நேசமணி நகர் போலீஸ் நிலையத்திலும் வல்லரசு மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தப்பியோடிய 3 மணி நேரத்தில் கைதியை பிடித்த போலீசாருக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    அதே நேரத்தில் வல்லரசு தப்பி சென்றபோது பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு போலீசார் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×