search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது செய்யப்பட்ட நர்சுகள் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேற்றம்: மாற்று வழியில் போராடுவதாக அறிவிப்பு
    X

    கைது செய்யப்பட்ட நர்சுகள் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேற்றம்: மாற்று வழியில் போராடுவதாக அறிவிப்பு

    • கடந்த டிசம்பர் 31-ந் தேதியுடன் ஒப்பந்த நர்சுகள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
    • போலீசாரின் வேன்களில் ஏற மறுத்த நர்சுகள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    சேலம்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலின்போது அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 2000-க்கும் மேற்பட்ட நர்சுகள் நியமிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் 31-ந் தேதியுடன் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதை அடுத்து தங்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த செவிலியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கடந்த 1-ந் தேதி முதல் சேலத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முதல் நாளில் கலெக்டர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீசாரால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். 2-ம் நாள் போராட்டத்திற்கு கூடுதல் நர்சுகள் பங்கேற்று மீண்டும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    3-ம் நாளான நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த திட்டமிட்டனர். நர்சுகளின் போராட்டத்தை தடுக்க போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வந்தனர். இதையடுத்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பின்புற வாசல் அருகே சாலையோரம் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.

    போராட்டத்தின் போது அனைவரும் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு நிரந்தர பணி வழங்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதை அடுத்து அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக நேற்று இரவு நாட்டாமை கட்டிடம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 131 நர்சுகளை போலீசார் கைது செய்து கோட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    பின்னர் இன்று அதிகாலை அவர்களை மண்டபத்தில் இருந்து வெளியேறுமாறு போலீசார் கூறினார். ஆனால் நர்சுகள் வெளியேற மறுத்ததால் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டனர். இதில் சிலர் மீண்டும் மண்டபத்திலிருந்து வெளியேற மறுத்ததால் அவர்களை போலீசார் வேன்களில் ஏறுமாறு கட்டாயப்படுத்தினார். ஆனால் போலீசாரின் வேன்களில் ஏற மறுத்த நர்சுகள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    அப்போது, போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் தற்போது சேலத்தில் இருந்து வெளியேறுகிறோம். ஆனால் மாற்று வழியில் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று கூறியபடி 5 கிலோமீட்டர் தூரம் நடந்தபடியே சென்றனர். இதனால் அவர்கள் மீண்டும் வேறு வழியில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று கருதி, போலீசார் கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு ஆஸ்பத்திரி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×