search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் டார்ச் லைட்டில் ஜொலித்த அண்ணாமலை பாதயாத்திரை
    X

    செல்போன் டார்ச் லைட்டில் ஜொலித்த அண்ணாமலை பாதயாத்திரை

    • பாதயாத்திரையின் போது வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • மின்சாரம் துண்டிக்கப்பட்டதனால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.

    தென்காசி:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் 2-ம் கட்ட பாதயாத்திரை தென்காசி மாவட்டத்தில் நேற்று தொடங்கிய நிலையில் கடையம் பகுதியில் பாதயாத்திரை முடித்துவிட்டு இரவில் தென்காசி கீழப்புலியூரில் இருந்து தென்காசி புதிய பஸ் நிலையம் வரை நடைபெற்ற பாதயாத்திரையின் போது வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தென்காசி ரெயில்வே மேம்பாலத்தில் பாத யாத்திரை சென்று கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் துண்டி க்கப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் யாத்திரையில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தங்களின் செல்போனில் உள்ள டார்ச் லைட்டை ஆன் செய்து ஒளிர விட்டவாறு உற்சாகமாக கையசைத்து பாதையாத்திரை மேற்கொண்டனர். இது அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்தது.

    Next Story
    ×