search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்திருப்பேரையில் பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்
    X

    பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட காட்சி.

    தென்திருப்பேரையில் பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்

    • வைகாசி விசாகத்தை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    • முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூலான் அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் குருகாட்டூர் கிராமத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் - நெல்லை மெயின் ரோட்டில் திருச்செந்தூர் செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு குருகாட்டூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூலான் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சதீஸ் குமார், குருகாட்டூர் ஜாலிபிரன்ட்ஸ் தலைவர்ராஜன், இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் சுதன் மற்றும் கிறிஸ்தவ பிரமுகர்களும் மத வேறுபாடின்றி கலந்து கொண்டனர்.

    சுமார் 25 வருடங்களாக இப்பணியை திறம்பட செய்து வரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூலானை ஊர்மக்கள் பாராட்டினர்.

    Next Story
    ×