search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்து பிரசவங்களும் மருத்துவரின்   கண்காணிப்பில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்  -தருமபுரி கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    விழிப்புணர்வு கருத்தரங்கினை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து பேசிய காட்சி.

    அனைத்து பிரசவங்களும் மருத்துவரின் கண்காணிப்பில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் -தருமபுரி கலெக்டர் அறிவுறுத்தல்

    • சமூக நலத்துறை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கினை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.
    • அனைத்து பிரசவங்களும் மருத்துவராலும், மருத்து வரின் கண்காணிப்பில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், ன்ற கருப்பொருளை மையமாக கொண்ட மருத்துவம் மற்றும் சமூக நலத்துறை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கினை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் பெண்குழந்தைகளின் பாலின விகிதம் குறைவாக உள்ளது.

    பச்சிளம் குழந்தைகளின் இறப்பினை தடுத்திட மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனை களில் 24 மணிநேரமும் குழந்தைகள் நல மருத்துவர் பணியமர்த்தப ்பட்டுள்ளனர்.

    தனியார் மருத்துவம னைகளில் பிறக்கும் கு ழந்தைகளில் குறைபாடுள்ள குழந்தைகளை தேவைப்படின் உயர் சிகிச்சைக்காக பரிந்துரை செய்ய வேண்டும். அனைத்து பிரசவங்களும் மருத்துவராலும், மருத்து வரின் கண்காணிப்பில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

    தனியார் மருத்துவம னைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு குறித்தும், தாய்ப்பாலின் அவசியம் குறித்து தாய்மார்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மருத்துவர்கள் கருத்தரி த்துள்ள தாய்மார்களுக்கு குடும்ப கட்டுபாடு முறையின் அவசியத்தை எடுத்துக்கூறி உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.

    தருமபுரி மாவட்டத்தில் ஸ்கேன் கருவியின் உதவியுடன் கருவின் பாலினத்தை தெரிவிக்கும் ஸ்கேன் மையங்கள், பாலினத்தை அறிந்து கருக்கலைப்பு செய்யும் மருத்துவமனைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே, பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் அனைவரும் தங்களுக்கு உள்ள பொறுப்புகளையும், சமூக கடமைகளையும் அறிந்து தருமபுரி மாவட்டம் மருத்துவம் மற்றும் சுகாதார குறியீட்டில் முன்னேற்றம் அடைய ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கருத்தரங்கில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, அரசு தருமபுரி மருத்துவக்கல்லுரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி, துணை இயக்குநர் சுகாதாரப்ப ணிகள் சவுண்ட ம்மாள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மகப்பேறு தலைமை மருத்துவர் மலர்விழி, மாவட்ட சமூக நல அலுவலர் ஜான்சிராணி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×