search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் மாயம்
    X

    வாலிபர் மாயம்

    • பதறிப்போன தங்கராஜ் தனது மகனை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தார்.
    • எங்கும் தேடியும் கிடைக்காததால் ஜெயராஜ் மாயமானது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ராசுவீதி துளுக்கானி மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் ஜெயராஜ் (வயது19). இவர் கடந்த மாதம் 28-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றார். ஆனால் வீடு திரும்பி வரவில்லை. இதனால் பதறிப்போன தங்கராஜ் தனது மகனை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தார்.

    எங்கும் தேடியும் கிடைக்காததால் ஜெயராஜ் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து தங்கராஜ் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜெயராஜை தேடிவருகின்றனர்.

    Next Story
    ×