search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய அ.தி.மு.க. பிரமுகர் கைது
    X

    இளம்பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய அ.தி.மு.க. பிரமுகர் கைது

    • குமணன் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார்.
    • குமணன் பேச்சை இளம்பெண் செல்போனில் பதிவு செய்து தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த இரும்புலியூர்,ஜெருசலம் நகரை சேர்ந்தவர் குமணன்(47). அ.தி.மு.க.வில் 53-வது வார்டு வட்ட செயலாளராக உள்ளார்.

    இவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் கணவரை பிரிந்து வாழும் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் வசித்து வருகிறார். அவருக்கு குமணன் பண உதவி செய்ததாக தெரிகிறது.

    இந்தநிலையில் அந்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு குமணன் அடிக்கடி தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இது தொடர்ந்து நீடித்ததாக தெரிகிறது.

    இதையடுத்து அவரது பேச்சை அந்த இளம்பெண் செல்போனில் பதிவு செய்து தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க. வட்டச் செயலாளர் குமணனை கைது செய்தனர்.

    Next Story
    ×