search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்களிடம்  பணம் வசூலிப்பதாக குற்றசாட்டு
    X

    வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளை படத்தில் காணலாம்.

    100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்களிடம் பணம் வசூலிப்பதாக குற்றசாட்டு

    • பணம் பெறுவதற்கு பணியாளர்கள் ஒருவருக்கு தலா 500 ரூபாய் வரை வாங்குவதாக குற்றசாட்டு தெரிவித்தனர்.
    • வட்டார வளர்ச்சி அலுவலர்கள் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க கூடாது என கூறி கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் உதயா தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன் வரவு, செலவினங்கள் குறித்து அறிக்கை வாசிக்கப்பட்டது.

    அப்போது ஒரு சில பணிகளை செய்யாமலேயே, நிதி எடுப்பதாக மன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

    மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்றிய பொது நிதியிலிருந்து சமையல் கூடம் கட்டுவதற்கு 4 இடங்களுக்கு ஒன்றிய குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாமல், ஒப்பந்தம் விடப்பட்டதாக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

    மேலும் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் இருப்பினும் அந்த பணிகளுக்கு அதிகாரிகள் ஒப்பந்த விடாமல், ஒன்றிய குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு தெரியாமல் நள்ளிரவில் ஒப்பந்தம் வைத்துள்ளனர்.

    அதனை முதலில் ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அப்பொழுது மன்றத்தில் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களிடையே பெரும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    கடத்தூர் ஒன்றிய பகுதிகளில் கிராம ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் செய்யப்படுகின்ற வேலைகளுக்கு பணியாளர்களை பயன்படுத்தாமல், ஜே.சி.பி. இயந்திரங்களைக் கொண்டு வேலை செய்துவிட்டு, பிறகு பணியாளர்கள் செய்தது போல் ஊராட்சி நிதியில் பணம் பெறுவதற்கு பணியாளர்கள் ஒருவருக்கு தலா 500 ரூபாய் வரை வாங்குவதாக குற்றசாட்டு தெரிவித்தனர்.

    மேலும் பணம் வாங்குவது குறித்து யாரிட மாவது முறையிட்டாலும் அடுத்த நாள் வேலை வழங்க முடியாது என்று தெரிவிப்பதாகவும், மேலும் இதை எங்கு வேண்டுமென்றாலும் புகார் தெரிவிக்கலாம்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரைக்கும் பணம் கொடுப்பதாக வசூல் செய்பவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    ஒன்றிய குழு உறுப்பினர் நேரடியாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலையிலும் பகிரங்கமாக தெரிவித்தனர்.

    முறைகேடுகள் குறித்து உறுப்பினர்கள் தெரிவித்ததால், அங்கிருந்த செய்தியாளர்களை படம் எடுக்கக் கூடாது என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

    இதனை கண்டித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க கூடாது என கூறி கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

    சிறிது நேரம் கழித்து நடைபெற்ற கூட்டத்தில், நள்ளிரவில் விடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், அந்த ஒப்பந்தம் வழங்கிய அதிகாரியை நீதிமன்றம் வரைக்கும் கொண்டு செல்வோம்.

    மேலும் மக்களுக்கு சேவை செய்ய வந்த தங்களுக்கு தெரியாமல், பணிகளை மேற்கொண்டதால் இங்கே கொடுக்கின்ற டீ குடித்தால் கூட அது மக்களுக்கு செய்கின்ற துரோகம் என வாங்க கவுன்சிலர்கள் மறுத்து விட்டனர்.

    மக்களுக்காக அரசு செய்யும் திட்டப்பணிகள், செய்யப்பட உள்ள வேலைகள், தேவையான அடிப்படை தேவைகள், குறைகள் என செய்தி யாளர்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் செய்தி எடுப்பதை தடுக்கக் கூடாது. மற்றும் இனிவரும் கூட்டங்களில் அவர்களுக்கு அனுமதி அளித்து இருக்கைகள் வழங்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கவுன்சிலர்கள் பேசினர்.

    அதிகாரிகள் மற்றும் சில பஞ்சாயத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரனை நடத்த வேண்டும் என கூட்டத்தில் பகிரங்கமாக புகார் தெரிவித்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×