என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் தவறி விழுந்து பலி
- மேம்பாலத்தில் சென்றபேது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் பாலத்தில் இருந்து கீழே பாய்ந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்:
விருதுநகர் ஆனைக் குழாய் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 28), எலக்ட்ரீசியன். இவரும் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் சிவக்குமார் (50) என்பவரும் நேற்று இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை பிரபாகரன் ஓட்டினார். சிவக்குமார் பின்னால் அமர்ந்திருந்தார்.
அவர்கள் விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபேது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் பாலத்தில் இருந்து கீழே பாய்ந்தது.
இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் பொதுமக்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகரன், சிவக்குமார் ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இதுபற்றி சிவக்குமாரின் மனைவி ராணி விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






