search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடிக்கிருத்திகை விழாவுக்காக திருத்தணியில் கூடுதலாக 4 வாகனம் நிறுத்தும் இடம்- ஆலோசனை கூட்டத்தில் முடிவு
    X

    ஆடிக்கிருத்திகை விழாவுக்காக திருத்தணியில் கூடுதலாக 4 வாகனம் நிறுத்தும் இடம்- ஆலோசனை கூட்டத்தில் முடிவு

    • ஆடிக்கிருத்திகை திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக தற்காலிக வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்படும்.
    • திருத்தணி பகுதியில் நடைபெற்று வரும் பொதுப்பணித்துறை பணிகள், கூட்டு குடிநீர் திட்டபணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை திருவிழா வருகிற 21-ந்தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து, ஆர்.டி.ஓ. ஹசத்பேகம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஆர்.டி.ஒ. ஹசத்பேகம் கூறும்போது, ஆடிக்கிருத்திகை திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மலைக்கோவில், திருக்குளம், நல்லான் குளம், படி பாதை ஆகிய இடங்களில் கூடுதலாக தற்காலிக வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்படும். கூடுதலாக சிறப்பு பஸ்கள், பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுவார்கள். மேலும் திருத்தணி பகுதியில் நடைப்பெற்று வரும் பொதுப்பணித்துறை பணிகள் மற்றும் கூட்டு குடிநீர் திட்டபணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றார்.

    இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரணித், தாசில்தார் வெண்ணிலா, நகராட்சி ஆணையர் ராமஜெயம் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×