search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே காதலியை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்த வாலிபர்
    X

    பண்ருட்டி அருகே காதலியை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்த வாலிபர்

    • எம்ஜிஆர் பேக்கரி கடையில் வேலை செய்து வருகிறார்.
    • காதலனிடம் தன்னை திருமணம் செய்ய கூறி உள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி ,மருங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை படித்து, கடந்த 2 ஆண்டுகளாக முத்தாண்டி குப்பத்தில் உள்ள எம்ஜிஆர் பேக்கரி கடையில் வேலை செய்து வருகிறார். இவர், பக்கத்து ஊரா னமேல்காங்கிருப்பை சேர்ந்த ஜெயபால் என்பவரிடம் பேசி பழகி காதலித்துவந்ததாக கூற ப்படுகிறது

    விடுமுறை நாட்களில் முத்தாண்டிக்குப்பம் சின்ன ப்பிள்ளை என்பவரது முந்திரி தோப்பில் சந்தித்து ஜெயபால் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி வலுக்க ட்டாயமாக உல்லாசம் கொண்டார். இதனால் அந்த பெண் கர்ப்பம் ஆனார். இதுபற்றி அந்த பெண் தனது காதலனிடம் தன்னை திருமணம் செய்ய கூறி உள்ளார். ஆனார் ஜெயபால் மறுத்துள்ளார். இது பற்றி அந்த பெண் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்புகாரின் பேரில் போக்சோசட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துமேல்காங்கிருப்பை சேர்ந்த ஜெயபாலை வலை வீசிதேடி வருகின்றனர்.

    Next Story
    ×