என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரம் அருகே வாலிபர் தற்கொலை
    X

    மாமல்லபுரம் அருகே வாலிபர் தற்கொலை

    • விமல்குமார் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென விஷம் குடித்து மயங்கினார்.
    • மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன்.இவரது மகன் விமல்குமார் (வயது22). கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்த விமல்குமார் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென விஷம் குடித்து மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே விமல்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×