என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கோவிலூர் அருகே பிரபல கள்ள சாராய வியாபாரி கைது
    X

    கைது செய்யப்பட்ட சுரேஷ்.

    திருக்கோவிலூர் அருகே பிரபல கள்ள சாராய வியாபாரி கைது

    திருக்கோவிலூர் அருகே பிரபல கள்ள சாராய வியாபாரி கைது

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீசாரகம் வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் என்கிற கட்ட சுரேஷ். பிரபல கள்ள சாராய வியாபாரி. இவரை கைது செய்ய விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் உத்தரவின் பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வீரபாண்டி கிராமத்தில் நடைபெற்ற வாகன சோத னையின் போது வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் மடக்கி பிடித்தனர். அதனை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் 60 லிட்டர் சாராயம் எடுத்து வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அதனை கொண்டு வந்தது வீரபாண்டி காமன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் என்கின்ற கட்ட சுரேஷ் (வயது 40) என்றும், திருவண்ணாமலை மாவட்டம் அண்டம்ப ள்ளத்தில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது. மேலும் அவனிடமிருந்து 60 லிட்டர் சாராயம் மற்றும் அதனை கடத்தி வந்த மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்த துடன் சுரேஷையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×