என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் மகளிருக்கானவிளையாட்டு போட்டிகள்
    X

    கிருஷ்ணகிரியில் மகளிருக்கானவிளையாட்டு போட்டிகள்

    • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதியை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • முன்னதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஸ்குமார் வரவேற்றார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான மகளிருக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதியை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவில் மகளிருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதில், 100 மீ., 200 மீ., 400 மீ., ஓட்டப் போட்டிகளும், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் போட்டிகளும், இறகுப்பந்து விளையாட்டில் இரட்டையர் பிரிவு போட்டிகளும், கபாடி, ஜுடோ மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகள் நடந்தன.

    இப்போட்டிகளை கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் தொடங்கி வைத்தார். முன்னதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஸ்குமார் வரவேற்றார்.

    அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த அனைத்து வயது பிரிவுகளிலும், 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×