search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சியை 8 லட்சம் பேர் பார்த்தனர்
    X

    சென்னையில் நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சியை 8 லட்சம் பேர் பார்த்தனர்

    • தீவுத்திடலில் பொருட்காட்சி நடந்து வருகிறது.
    • 1,47,205 குழந்தைகள் என மொத்தம் 7,96,584 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள்.

    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் பொருட்காட்சி நடந்து வருகிறது. இங்கு நடைபெறும் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியின் 64 வது நாளான நேற்று வரை 64 நாட்களிலும் சேர்த்து 6,49,379 பெரியவர்கள், 1,47,205 குழந்தைகள் என மொத்தம் 7,96,584 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள்.

    2019-ம் ஆண்டில் 64 நாட்களில் பார்வையிட்ட பார்வையாளர்கள் எண்ணிக்கை 6,08,502 ஆகும். 2020-ம் ஆண்டில் 64 நாட்களில் பார்வையிட்ட பார்வையாளர்கள் எண்ணிக்கை 6,83,603 ஆகும்.

    2023-ம் ஆண்டில் 64 நாட்களில் பார்வையிட்ட பார்வையாளர்கள் எண்ணிக்கை-7,96,584 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×