search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அச்சிறுப்பாக்கத்தில் 5-ந்தேதி வெள்ளையன் தலைமையில் வணிகர் மாநாடு
    X

    அச்சிறுப்பாக்கத்தில் 5-ந்தேதி வெள்ளையன் தலைமையில் வணிகர் மாநாடு

    • உலக வர்த்தக ஒப்பந்தத்தின் கேடான ஆன்லைன் வணிக ஆபத்திலிருந்து சில்லரை வணிகத்தைக் காக்க உறுதியேற்போம்.
    • மத்திய அரசின் அந்நிய சார்புக் கொள்கையால் நம் நாட்டில் அந்நிய ஆதிக்கம் வேரூன்றி வலுப்பெற்று வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் 40-வது வணிகர் தினவிழா, மாநில மாநாடு மற்றும் பொதுக்குழு, மேல்மருவத்தூரை அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் (சென்னை - திண்டிவனம் நெடுஞ்சாலையில் "சில்லரை வணிகர் உரிமை மீட்பு மாநாடு" பிரமாண்டமாக நடக்கிறது.

    மாநாட்டிற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன் தலைமை வகிக்கிறார். இது குறித்து தமிழ்நாடு வணிக சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலக வர்த்தக ஒப்பந்தத்தின் கேடான ஆன்லைன் வணிக ஆபத்திலிருந்து சில்லரை வணிகத்தைக் காக்க உறுதியேற்போம். வணிகத் தொழிலைக் காத்திட மாநாட்டில் குடும்பத்தோடு அணிவகுப்போம். உறுதியான முடிவெடுப்போம். உலக வர்த்தக ஒப்பந்தத்திற்கு முடிவு கட்டுவோம். மத்திய அரசின் அந்நிய சார்புக் கொள்கையால் நம் நாட்டில் அந்நிய ஆதிக்கம் வேரூன்றி வலுப்பெற்று வருகிறது.

    இதன் விளைவாக அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டிருக்கும் சில்லரை வணிகம், சிறுகுறுந் தயாரிப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள்-காக்கவும், வணிகர் நலன், மக்கள் நலன், நாட்டு நலன் காக்கவும் இந்த மாநாட்டில் வணிகர்கள் தங்கள் குடும்பத்தாருடன் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

    இவ்வாறு த. வெள்ளையன் கூறி உள்ளார்.

    மாநாட்டில் பொது செயலாளர் எஸ்.சௌந்தர் ராஜன் (ஏ.ராஜா) பொருளாளர் எஸ்.பீர்முகம்மது,செயல் தலைவர்கள் கே.தேவராஜ், வியாசை எம்.மணி, பா.விநாயகமூர்த்தி, டேவிட்சன் செயல் தலைவர் ஆ.பாஸ்க ரன், ராமநாதன், டி.பாலகிருஷ்ணன், எஸ்.ஆர்.வி. ரத்தினம், மாவட்ட தலைவர்கள் ப.தேவராஜ், கொளத்தூர் சந்தானம், கோயம்பேடு துரைமாணிக்கம், மணலி சண்முகம், வி.ராஜேந்திரன், நா.வேலு, செஞ்சி எம்.கண்ணன், எம்.ராமகிருஷ்ணன், செல்வராஜ், நிர்வாகிகள் புரசை குமார், ஓட்டேரி ஜோதிராம், செய்தி தொடர்பாளர் ஆல்பர்ட், மெஸ்பர் வெள்ளையன், பெரம்பூர் த. பத்மநாபன், பெரம்பூர் எஸ். ரங்கசாமி நாடார் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டு நிகழ்ச்சிகள் காலை 9 மணிக்கு தொடங்குகிறது. தேசிய கொடியை ஏகாம்பரம் ஏற்றுகிறார்.

    Next Story
    ×