search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை கடற்கரை பகுதிகளில் 3 மாதத்தில் 42 ஆயிரம் ஆமை முட்டைகள் சேகரிப்பு
    X

    சென்னை கடற்கரை பகுதிகளில் 3 மாதத்தில் 42 ஆயிரம் 'ஆமை முட்டைகள் சேகரிப்பு'

    • பறவைகள் மற்றும் மனிதர்களால் பெருமளவு ஆமை முட்டைகள் சேதமடைந்து வந்தன.
    • ஆமை குஞ்சுகள் பொறித்ததும் அவை கடலில் விடப்படும் அதுவரை சேகரிக்கப்பட்ட ஆமை முட்டைகளில் 83 சதவீதம் நல்ல நிலையில் இருந்தன.

    மாமல்லபுரம்:

    ஆமைகளின் இனப்பெருக்க காலமாக டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை உள்ளது. மே மாதம் வரை முட்டையில் இருந்து வெளிவந்த ஆமை குஞ்சுகள் கடலுக்குள் செல்வது வழக்கம்.

    சென்னை கடற்கரை பகுதியான மெரினா ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, பெசன்ட் நகர், பழவேற்காடு பகுதிகளில் அதிக அளவு ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் கரையோரம் வந்து முட்டையிட்டு செல்வது வழக்கம்.

    பறவைகள் மற்றும் மனிதர்களால் பெருமளவு ஆமை முட்டைகள் சேதமடைந்து வந்தன. இதையடுத்து ஆமைகள் முட்டைகளை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அவர்கள் ஆமைகள் அதிக அளவில் முட்டையிட்டு செல்லும் கடற்கரை பகுதிகளை கண்காணித்து ஆமை முட்டைகளை பத்திரமாக சேகரித்து வருகிறார்கள்.

    கடந்த மூன்று மாதங்களில் சென்னை கடற்கரை பகுதிகளில் 430 இடத்தில் இருந்து 42 ஆயிரத்து 650 ஆமை முட்டைகளை சேகரித்து உள்ளனர். அதில் பெசன்ட்நகர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள ஆமை குஞ்சு பொறிப்பு பாதுகாப்பு மையத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

    ஆமை குஞ்சுகள் பொறித்ததும் அவை கடலில் விடப்படும் அதுவரை சேகரிக்கப்பட்ட ஆமை முட்டைகளில் 83 சதவீதம் நல்ல நிலையில் இருந்தன. சுமார் 46,755 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டு உள்ளது என்று ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் தெரிவித்தனர். கடந்த ஆண்டு 490 இடங்களில் இருந்து 55 ஆயிரத்து 713 ஆைம முட்டைகள் சேகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது,

    "கடந்த 2019-2020, 2020-2021 ஆம் ஆண்டுகள் ஆமை முட்டைகளை சேகரிப்பதில் மோசமான ஆண்டாக இருந்தது. 2021-ம் ஆண்டு 41 ஆயிரத்து 326 ஆமை முட்டை கள் சேகரிக்கப்பட்டது.

    தற்போது சென்னை கடற்கரை பகுதியில் இறந்து ஒதுங்கப்படும் ஆமைகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. பழவேற்காட்டில் கடந்த மாதம் அதிகமான ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. ஆமைகள் நடமாட்டம் கடற்கரை பகுதியில் இந்த மாதம் இறுதிவரை இருக்கும். முட்டைகளில் இருந்து ஆமை குஞ்சு பொறிக்க 45 முதல் 50 நாட்கள் வரை ஆகும்" என்றார்.

    Next Story
    ×