search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தேவரியம்பாக்கம் கிராமத்தில் நடப்பட்ட 400 மரக்கன்றுகள்
    X

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தேவரியம்பாக்கம் கிராமத்தில் நடப்பட்ட 400 மரக்கன்றுகள்

    • மரக்கன்றுகள் நடும் விழா ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் தலைமையில் நடைபெற்றது.
    • தரிசு நிலத்தில் கிராம மக்களின் உதவியோடு 400 பயன் தரும் மரக்கன்று களை நட்டு வைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக கொண்டாடி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் தேவரியம்பாக்கம் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தரிசு நிலங்களில் மரக்கன்றுகள் நடும் விழா ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் தலைமையில் நடைபெற்றது.

    மரக்கன்றுகள் நடும் விழாவில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே. தேவேந்திரன் ஒன்றிய குழு துணைத் தலைவர் பி.சேகர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காஞ்சனா, முத்து சுந்தரம், ஆகியோர் கிராம மக்களோடு கலந்து கொண்டு ஆடிப்பட்டம் தேடி விதைக்க வேண்டும் எனும் பழமொழிக்கு ஏற்ப தேவரியம்பாக்கம் கிராமப் புறத்தில் தேர்வு செய்யப்பட்ட தரிசு நிலத்தில் கிராம மக்களின் உதவியோடு 400 பயன் தரும் மரக்கன்று களை நட்டு வைத்தனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோவிந்தராஜன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×