என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா, லாட்டரி, குட்கா விற்ற 23 பேர் கைது
- கிருஷ்ணகிரி, ஓசூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
- ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ஒரு ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் எங்கும் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடை பெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர்.
அந்த வகையில் கஞ்சா விற்றதாக ஊத்தங்கரை, கல்லாவி, பர்கூர், கந்திகுப்பம், கிருஷ்ணகிரி, ஓசூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ஒரு ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி பகுதியில் லாட்டரி விற்ற 3 பேரை கைது செய்த போலீசார், ரூ.500 மற்றும் 11 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த ஊத்தங்கரை, பாரூர், ஓசூர் பகுதியை சேர்ந்த 3 பேரை கைது செய்த போலீசார் ரூ.250 மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தனர்.
Next Story






