என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிகளுக்கு ரூ.66 லட்சம் மதிப்பிலான 211 ஸ்மார்ட் டி.வி.க்கள்
- பள்ளிகளுக்கு 43 அகன்ற ஸ்மார்ட் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டத்தை ஐ.வி.டி.பி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
- அரசின் பங்களிப்பு நிதியை உபயோகப்படுத்தி பள்ளிகளின் பங்களிப்பாக வழங்கிய ரூ.66 லட்சத்தில் 211 ஸ்மார்ட் டி.வி.க்கள் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி
அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப் புற ஏழை எளிய மாணவ, மாணவியரின் கற்றல் திறனை மேம்படுத்தவும், ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் பணியை நவீன கால மாற்றத்திற்கேற்ப ஒலி, ஒளி வடிவில் புதுமையான முறையில் மேற்கொண்டு மாணவர்களின் கற்றல் அனுபவத்தை இனிமையாக்கும் பொருட்டு மாநிலத்திலேயே முன்னோடி திட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 43 அகன்ற ஸ்மார்ட் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டத்தை ஐ.வி.டி.பி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன் முதற்கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த அரசு பள்ளிகளுக்கு ஐ.வி.டி.பி நிறுவனத்தின் பங்களிப்பாக ரூ.66 லட்சம் மதிப்பிலான 211 ஸ்மார்ட் டி.வி.க்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது ஐ.வி.டி.பியானது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஷ்வரி அனுமதியுடன் அனைத்து அரசு பள்ளி தலைமை யாசிரியர்களையும் ஊக்கப்படுத்தி அரசின் பங்களிப்பு நிதியை உபயோகப்படுத்தி பள்ளிகளின் பங்களிப்பாக வழங்கிய ரூ.66 லட்சத்தில் 211 ஸ்மார்ட் டி.வி.க்கள் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.
இவை அனைத்தின் மொத்த மதிப்பான ரூ.1.32 கோடி-யில் 422 ஸ்மார்ட் டி.வி.க்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஷ்வரி முன்னிலையில், அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தோடு பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிசால் வழங்கப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஸ்மார்ட் டி.வி.க்களை வழங்கி பேசிய நிறுவனத் தலைவர், பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்களின் சிறப்பான வழிகாட்டுதலோடு, கல்வி விளையாட்டு ஆகியவற்றுடன் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கவும் ஐ.வி.டி.பி நிறுவனம் இக்கல்வி உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.






