search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    சங்கராபுரம் அருகே அதிகமாக மதுகுடித்து விவசாயி பலி

    சங்கராபுரம் அருகே அதிகமாக மதுகுடித்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரைச் சேர்ந்த குமார்(வயது 49). விவசாயி. மது அருந்தும் பழக்கம் உடையவர். இவர் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் மயங்கி விழுந்தார். இவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×