என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
புதுச்சேரியில் மீண்டும் கொரோனா
புதுவையில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா தூக்கியுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து பூஜ்யத்தை எட்டியிருந்தது.
கடந்த சில நாட்களாக தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. புதுவையில் ஆயிரத்து 158 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் புதிதாக 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
காரைக்காலில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 17, காரைக்காலில் 5, ஏனாமில் 14 பேர் என மொத்தம் 36 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.
மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 71 ஆயிரத்து 127 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்த தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா நெறி முறைகளை தொடரவும், அனைவரும் முக கவசம் அணியவும் மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Next Story






