என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதுச்சேரியில் மீண்டும் கொரோனா

    புதுவையில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா தூக்கியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து பூஜ்யத்தை எட்டியிருந்தது.

    கடந்த சில நாட்களாக தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. புதுவையில் ஆயிரத்து 158 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் புதிதாக 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

    காரைக்காலில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 17, காரைக்காலில் 5, ஏனாமில் 14 பேர் என மொத்தம் 36 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.  

    மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 71 ஆயிரத்து 127 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

    இந்த தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா நெறி முறைகளை தொடரவும், அனைவரும் முக கவசம் அணியவும் மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.
    Next Story
    ×