search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனுக்களுக்கு தீர்வு
    X
    மனுக்களுக்கு தீர்வு

    200 மனுக்களுக்கு தீர்வு

    ராஜபாளையத்தில் ஜமாபந்தி நடந்தது. இதில் 200 மனுக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டது.
    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் நடப்பு ஆண்டிற்கான ஜமாபந்தி எனும் கணக்குகள் தேர்வாணையம் நடத்தப்பட்டது. 

    ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சாத்தூர் கோட்டாட்சியர் புஷ்பம் கலந்துகொண்டு மனுக்களை பெற்றார். ராஜபாளையம் வட்டாட்சியர் சீனிவாசன்,  துணை வட்டாட்சியர் கோதண்டராமன், தனி வட்டாட்சியர்கள் ராமநாதன், சரஸ்வதி மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்துகொண்டு கணக்குகளை காட்டி சரிபார்க்கப்பட்டது. இதில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. ஒருவார காலம் நடந்த  ஜமாபந்தியில் 360 மனுக்கள் பெறப்பட்டது‌. 200 மக்களுக்கான தீர்வு காணப்பட்டது. 

    பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவைகளுக்கான சான்றிதழ் உள்பட பல்வேறு திட்டங்களுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. 
    Next Story
    ×