search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    திருநள்ளாறில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

    காரைக்கால் அருகே திருநள்ளாறில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
    காரைக்கால்:

    காரைக்காலை அருகே திருநள்ளாறு பகுதியில், போலீசார் ரோந்து சென்றனர். திருநள்ளாறு புறவழிச்சாலையில், சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார்.

    தொடர்ந்து, காவல்நிலையம் அழைத்துசென்று விசாரித்தபோது அவர் பெயர் நறுமுகன்(வயது20), காரைக்கால்மேடு சுனாமி நகரைச் சேர்ந்தவர் என்பதும், அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    அதனை தொடர்ந்து, போலீசார் நறுமுகனை கைது செய்து, ரூ.2 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை  கைப்பற்றினர்.
    Next Story
    ×