search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தார் சாலை புதுப்பிக்கும் பணியை, பிரகாஷ் எம்.எல்.ஏ.தொடங்கிவைத்த காட்சி.
    X
    தார் சாலை புதுப்பிக்கும் பணியை, பிரகாஷ் எம்.எல்.ஏ.தொடங்கிவைத்த காட்சி.

    ஒன்னல்வாடி ஊராட்சியில் ரூ.1 கோடியே 27 லட்சம் மதிப்பில் சாலை புதுப்பிக்கும் பணி பிரகாஷ் எம்.எல்.ஏ.தொடங்கிவைத்தார்

    ஒன்னல்வாடி ஊராட்சியில் புதிய சாலை அமைக்கும் பணியை பிரகாஷ் எம்.எல்.ஏ . தொடங்கி வைத்தார்.
    ஓசூர், 

    ஓசூர் ஒன்றியம் ஒன்னல்வாடி ஊராட்சியில், ஒன்னல்வாடி மெயின் சாலை முதல் ஜொனபண்டா வழியாக கெலமங்கலம் மெயின் சாலை வரை ரூ.1 கோடியே 27 லட்சம் மதிப்பில் தார்சாலை புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்படுகிறது.

    இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், கலந்துகொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி  வைத்தார். மேலும் இதில் முன்னாள் ஓசூர் எம்எல்.ஏ. பி.வெங்கடசாமி, மாநகர பொறுப்பாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா,   மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சீனிவாசன்,  துணை மேயர் ஆனந்தய்யா, ஒன்னல்வாடி ஊராட்சி மன்ற தலைவர் மாதேஷ், ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர்கள், ஒன்னல்வாடி ஊராட்சியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள், ஓசூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, பூபதி, மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×