search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுப்பணித்துறை அலுவலகத்தை நேரு எம்.எல்.ஏ. முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த காட்சி.
    X
    பொதுப்பணித்துறை அலுவலகத்தை நேரு எம்.எல்.ஏ. முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த காட்சி.

    பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட நேரு எம்.எல்.ஏ.

    தொகுதியில் பணிகள் நடைபெறவில்லை என்று பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட நேரு எம்.எல்.ஏ. போராட்டம்
    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதியில் வாய்க்கால்களை துர்வாருதல், புதிதாக சாலைகள் அமைத்தல் போன்ற அடிப்படை பணிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் பணிகள் மேற் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    இதை கண்டித்து உருளையன் பேட்டை  தொகுதி எம்.எல்.ஏ. நேரு, தொகுதி மக்களுடன் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டார். 

     அமைச்சர்கள் தொகுதியில் மட்டும் பணிகள் நடக்கிறது. எனது தொகுதியில் வேலை எதுவும் நடைபெறவில்லை  எனக்கூறி அதிகாரிகளிடம் நேரு எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறி யாளர் ஏழுமலை மற்றும் அதிகாரிகள், அங்கு வந்து எம்.எல்.ஏ.வுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுப்பணித்துறை மூலம்  உருளையன்பேட்டை தொகுதியில்  நடைபெற வேண்டிய பணிகள் அனைத்தையும் விரைவாக முடித்து தருவதாக  உறுதிய ளித்தனர். 

    இதையடுத்து நேரு எம்.எல்.ஏ. முற்றுகையை கைவிட்டு பொதுமக்களோடு கலைந்து சென்றார்.
    Next Story
    ×