என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட நேரு எம்.எல்.ஏ.
Byமாலை மலர்2 Jun 2022 8:52 AM GMT (Updated: 2 Jun 2022 8:52 AM GMT)
தொகுதியில் பணிகள் நடைபெறவில்லை என்று பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட நேரு எம்.எல்.ஏ. போராட்டம்
புதுச்சேரி:
உருளையன்பேட்டை தொகுதியில் வாய்க்கால்களை துர்வாருதல், புதிதாக சாலைகள் அமைத்தல் போன்ற அடிப்படை பணிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் பணிகள் மேற் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதை கண்டித்து உருளையன் பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு, தொகுதி மக்களுடன் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டார்.
அமைச்சர்கள் தொகுதியில் மட்டும் பணிகள் நடக்கிறது. எனது தொகுதியில் வேலை எதுவும் நடைபெறவில்லை எனக்கூறி அதிகாரிகளிடம் நேரு எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறி யாளர் ஏழுமலை மற்றும் அதிகாரிகள், அங்கு வந்து எம்.எல்.ஏ.வுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுப்பணித்துறை மூலம் உருளையன்பேட்டை தொகுதியில் நடைபெற வேண்டிய பணிகள் அனைத்தையும் விரைவாக முடித்து தருவதாக உறுதிய ளித்தனர்.
இதையடுத்து நேரு எம்.எல்.ஏ. முற்றுகையை கைவிட்டு பொதுமக்களோடு கலைந்து சென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X