search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    காரைக்கால் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

    காரைக்கால் அருகே கஞ்சா விற்றது தொடர்பாக வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் அருகே நிரவி ஆற்றங்கரைத் தெரு பகுதியில் நிரவி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அதில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (எ) படையப்பா (வயது 22) என்பதும், இளைஞர்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×