என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கலெக்டர் விசாகன் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மனு அளித்த பொதுமக்கள்
திண்டுக்கல் மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் அலுவலர்களுக்கு டோஸ் விட்ட கலெக்டர்
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இன்று வருவாய்த்தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்கள் பட்டா, சிட்டா அடங்கல் உள்ளிட்ட வருவாய் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் விசாகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலஅளவை சங்கிலி உள்பட உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story






