என் மலர்
உள்ளூர் செய்திகள்

மண்டலாபிஷேக பூஜையில் தருமபுர ஆதீனம் கலந்து கொண்டார்.
அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக பூஜை
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக பூஜை நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவ ட்டம் திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகபூஜை நடைபெற்றது. திருக்கடையூரில் தருமபுரம் ஆதீன த்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்தக் கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். மேலும் இங்கு மட்டுமே மணிவிழா, சதாபிஷேகம், ஆயுள்ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடை பெற்று வருகிறது.
கடந்த மார்ச் 27- ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிலையில் தர்மபுர ஆதீனம் 27 வது குருமகாசந்நதானம் மாசிலாமணி தேசிக ஞானச ம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் மண்டலாபிஷேகபூஜை நடைபெற்றன.
தொடர்ந்து விநாயகர்,அமிர்த கடேஸ்வரர், காளசம்ஹா ரமூர்த்தி, அபிராமி அம்மன் ஆகிய சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் பூஜைகளும் நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






