என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மது குடித்து விட்டு தகராறு செய்த 5 பேர் கைது
Byமாலை மலர்29 May 2022 5:21 AM GMT (Updated: 29 May 2022 5:21 AM GMT)
மதுகுடித்து விட்டு ரகளை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
பெரியக்கடை போலீசார் காந்திவீதி-தியாகு முதலியார் வீதி சந்திப்பில் ரோந்து சென்றனர். அப்போது ஒருவர் மது குடித்து விட்டு போதையில் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கோட்டக்குப்பம் பர்கத் நகரை சேர்ந்த முகமது அலி (வயது50) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
ஒதியஞ்சாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் உப்பளம் அம்பேத்கர் சாலை துறைமுக வாயில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு கும்பல் மது குடித்து விட்டு ரகளை செய்து கொண்டிருப்பதை போலீசார் கண்டனர். உடனே அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் உப்பளம் ராசுஉடையார் தோட்டம் பகுதியை சேர்ந்த ஜோசப்(36), கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்த வேலவன்(24), லாஸ்பேட்டை எழில் நகரை சேர்ந்த சதீஷ்(25) மற்றும் விழுப்புரம் அத்தியூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(31) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுபோல் சண்முகாபுரம் பகுதியில் பொது இடத்தில் ரகளை செய்த வடக்கு பாரதிபுரம் முருகன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் குண்டுமணி(30) என்பவரை மேட்டுப்பாளையம் போலீசாரும், கன்னியக்கோவில் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த அதே பகுதியை சேர்ந்த தேவா என்ற தேவநாதன்(35) என்பவரை கிருமாம்பாக்கம் போலீசாரும் கைது செய்தனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X