search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    ஆத்தூரில் மஞ்சப்பை திட்ட விழிப்புணர்வு பேரணி

    தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தேர்வுநிலை பேரூ ராட்சியில் மஞ்சப்பை திட்டத்தை வலியுறுத்தி விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது.
    ஆத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தேர்வுநிலை பேரூ ராட்சியில் தமிழக அரசு அறிவித்துள்ள மீண்டும் மஞ்சபை  திட்டத்தை  பொதுமக்கள், வியாபாரிகளிடம் வலியுறுத்தி  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

    ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணியை ஆத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் கமால்தீன்  தொடங்கி வைத்தார். 

    மெயின் பஜார் வழியாக வந்த பேரணி நான்கு ரத வீதி வழியாக வந்து அரசு மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பிளாஸ்டிக் எதிராக மாணவ- மாணவி கள் கோஷம் எழுப்பினர். 

    ஆத்தூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள்  மற்றும் மாணவ-மாணவிகள்  மீண்டும் மஞ்ச பை திட்டத்தை  வலியுறுத்தி பேனர்கள் மற்றும் பதாகைகளை கையில் ஏந்தியவாறு  சென்றனர். 

    பேரணியில்  செயல் அலுவலர் முருகன், துணை தலைவர் மகேஸ்வரி முருகப்பெருமாள், ஆத்தூர் அரசு பள்ளி மாணவ- மாணவிகள், கவுன்சிலர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், பேரூராட்சி  தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×