என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆத்தூரில் மஞ்சப்பை திட்ட விழிப்புணர்வு பேரணி
Byமாலை மலர்28 May 2022 9:27 AM GMT (Updated: 28 May 2022 9:27 AM GMT)
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தேர்வுநிலை பேரூ ராட்சியில் மஞ்சப்பை திட்டத்தை வலியுறுத்தி விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது.
ஆத்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தேர்வுநிலை பேரூ ராட்சியில் தமிழக அரசு அறிவித்துள்ள மீண்டும் மஞ்சபை திட்டத்தை பொதுமக்கள், வியாபாரிகளிடம் வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணியை ஆத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் கமால்தீன் தொடங்கி வைத்தார்.
மெயின் பஜார் வழியாக வந்த பேரணி நான்கு ரத வீதி வழியாக வந்து அரசு மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பிளாஸ்டிக் எதிராக மாணவ- மாணவி கள் கோஷம் எழுப்பினர்.
ஆத்தூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மீண்டும் மஞ்ச பை திட்டத்தை வலியுறுத்தி பேனர்கள் மற்றும் பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.
பேரணியில் செயல் அலுவலர் முருகன், துணை தலைவர் மகேஸ்வரி முருகப்பெருமாள், ஆத்தூர் அரசு பள்ளி மாணவ- மாணவிகள், கவுன்சிலர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X