search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூமிபூஜையில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
    X
    பூமிபூஜையில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமிபூஜை

    திட்டச்சேரியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடந்த பூமிபூஜையில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு மரைக்கான்சாவடியில் கடந்த 20 ஆண்டு காலமாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இது கொடுத்து முகமது ஷாநவாஸ் எம்எல்ஏவிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதன்படி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22 திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதனை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ஆத்மா திட்ட வட்டார தலைவர் செல்வ செங்குட்டவன், திட்டச்சேரி தி.மு.க நகர செயலாளர் முகமது சுல்தான், பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திக்கா, பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22 திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. 

    இதில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் சரவணன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், உத்தமசோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி பாலாஜி, ஊராட்சி செயலாளர் பாலசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×