search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழி அரசு மருத்துவமனையில் காவலர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
    X
    சீர்காழி அரசு மருத்துவமனையில் காவலர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

    காவலர்களுக்கு பேரிடர் காலங்களில் முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சி

    சீர்காழியில் காவலர்களுக்கு விபத்து, பேரிடர் காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
    சீர்காழி:

    சீர்காழி காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் சரகத்திற்கு உட்பட்ட சீர்காழி, கொள்ளிடம், புதுப்பட்டினம், திருவெண்காடு, வைத்தீ ஸ்வரன்கோவில், பூம்புகார் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த பயிற்சி முகாம் சீர்காழி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

    சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக் தலைமை வகித்தார். அரசு தலைமை மருத்துவர் பானுமதி, இன்ஸ்பெக்டர் மணிமாறன் முன்னி வகித்தனர்.பயிற்சி முகாமில் 108 வாகனத்தில் பணி புரியும் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் இணைந்து முதலுதவி குறித்த செயல் விளக்கம் அளித்தனர்.

    குறிப்பாக விபத்தில் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்தவர்கள், பாம்பு கடித்து பாதிக்கப்பட்ட வர்கள், மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திடீரென சுயநினைவு இழந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தற்காப்பு முதலுதவி சிகிச்சைகள் குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர். இதில் சீர்காழி சரகத்திற்கு உட்பட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் அனைத்து நிலை காவலர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×